உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஓசூரில் டைட்டன், அசோக் லேலண்ட், மார்க், பிஎம்சி கல்லூரி, அரிமா சங்கம், என்எச்ஆர்டி, ஐஎம்ஏ சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வருவாய் அலுவலர் தேன்மொழி, தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சபீனா, ஓசூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.