சென்னை,மார்ச்17- சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வருகின்ற ஞாயிறன்று (மார்ச்19) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமான் சுபி இசை நிகழ்ச்சி அன்பின் சிறகுகள் ஞாயிறன்று இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதால் நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் (விமான நிலைய மெட்ரோ, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ, டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, பரங்கிமலை மெட்ரோ) கடைசி ரயில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.