மதுராந்தகம்,ஜூலை 26- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் பழையனூர் கிராமத்தில் வசித்து வந்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் மதுராந்தகம் வட்ட தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூங்குழலியின் கணவருமான ஜி.தனசேகர் வெள்ளியன்று ( ஜூலை 26) காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் பழையனூர் கிளை செயலாளராக மூன்று முறையும், விவசாயிகள் சங்க மதுராந்தகம்வட்ட பொருளாளராக இரண்டு முறையும் திறம்பட செயலாற்றியவர். பல ஆண்டுகாலமாக இடதுசாரி இயக்க போராட்டங்களில் தொடர்ந்து தன்னை ஈடு படுத்தி கொண்டவர் இவ ருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். படாலம் அடுத்த பழை யனூர் கிராமத்தில் அவ ரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்டச் செயலாளர் ப.சு. பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் இ.சங்கர், வி.அரி கிருஷ்ணன், ,க.பகத்சிங் தாஸ், எம்.செல்வம், மது ராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, விதொச மாவட்ட நிர்வாகிகள் க.புருஷோத்தமன், சண்முகம், சசிகுமார், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் டேனியல் ஜெய்சிங், நிர்வாகிகள் தே.வாசுகி,வசந்தகுமார், முகமது உசேன், விக்டர் சுரேஷ் குமார், மதுராந்தகம் வட்டக் கிளை செயலாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.