districts

img

எம்.பத்மாவதி அம்மாள் உடல் தகனம்

சென்னை, மே 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை செங்கல்  பட்டு மாவட்டச் செயலாள ராக செயல்பட்டு மறைந்த தோழர் எஸ்.வி.எஸ்.மணி யின் மனைவி எம்.பத்மா வதி அம்மாள் (81) உடல் வெள்ளியன்று (மே 27) தகனம் செய்யப்பட்டது. முதுமையின் காரணாக மருத்துவமனையில் உயிரி ழந்த எம்.பத்மாவதியின் உடல் கட்சியின் தென் சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் அஞ்ச லிக்காக வைக்கப்பட்டி ருந்தது. அன்னாரது உட லுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன்,  தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.நம்பு ராஜன், இரா.சிந்தன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், ம.சித்ரகலா, தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலக மாக எடுத்துச் செல்லப்பட்டு ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.