திருவள்ளூர், மார்ச் 16- குழந்தைகள், பெண்கள் மீது பாலியல் வன்முறை தொடுக்கும் பாஜக அரசை அகற்றுவோம் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி.சுகந்தி வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அண்ணா சிலை அருகில் மாதர், வாலிபர், மாணவர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகள் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் கவிதா வரவேற்றார். இதில் மாவட்ட தலைவர் இ.மோகனா, பொருளாளர் பி.சசிகலா, மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் டி.மதன், எஸ்.கலையரசன், ஜெய்கணேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.டிக்சன், மக்களை தேடி மருத்துவ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரெபேக்கா ஆகியோர் பேசினர். இதில் பங்கேற்ற மாதர் சங்கத்தின் தலை வர் பி.சுகந்தி பேசுகையில், “பெண்களுக்கு வாக்குரிமை என்பது அரசியல் உரிமையை நிலைநாட்ட கூடிய உரிமையாகும். இந்த உரிமையை பெற மகளிர் தினத்திற்கு முக்கிய பங்கு உண்டு” என்றார். நாடகமாடும் மோடி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று பிரதமர் நரேந்திர மோடி இனிப்பான செய்தி என்று சொல்லி, சமையல் எரிவாயு ஒன்றுக்கு நூறு ரூபாய் விலை குறைப்பதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சிக்கு முன்பு 450 ரூபாயாக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர், மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் ரூ.1200 ஆக உயர்த்தினார். மோடி இப்போது மக்கள வைத் தேர்தலுக்காக நாடகமாடுகிறார் என்றும் அவர் கூறினார். தேசிய குற்றப்பிரிவு ஆவணம் வெளி யிட்ட புள்ளி விவரத்தில் 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களில் 32,608 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு மட்டும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையால் 57,548 வழக்கு கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டு காலத்தில் பாலியல் குற்றங்கள் 94 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசத்தில் வாழ்கிறோம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தேசத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்தான் செய்யும். பாஜக- வின் அரசின் கொள்கை கள் அப்படித்தான் இருக்கிறது. ஜனநாயக உரிமைகள், பாலின சமத்துவம், மதச்சார் பின்மை ஆகிய முக்கிய கோட்பாட்டை அப்பட்டமாக மீறும் பாஜக அரசை அகற்று வோம் என்றும் சுகந்தி கூறினார்.