சென்னை, ஜன. 27- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளியன்று (ஜன. 26) தண்டையார்பேட்டை வஉசி நகரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கக் கொடியை மாநிலத் தலைவர் தொ.வில்சன் ஏற்றி வைத்தார். அலுவலகத்தை மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து வகை யான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் களின் வாழ்வாதாரம் மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாக் கும் நடவடிக்கையில் சங்கம் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறது. மேலும் அவர்களின் மேம்பாட்டிற் காக களத்தில் நின்று போராடி வருகிறது. 40 விழுக்காடு ஊனம் இருந்தாலும் உதவித் தொகை கிடைக்க தொடர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. ஆயிரக் கணக்கான மாற்றுத்திறனா ளிகளை திரட்டி நான்கு முறை தில்லியில் போராடிய தன் விளைவாக 2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் இயற்றப் பட்டது. ஆனாலும் இதர கோரிக் கைகளை நிறைவேற்ற தொடர்ந்து போராட வேண்டி யுள்ளது. போராட்டத்தின் மூலமே கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். அப்படிப்பட்ட போராட்ட களமாக இந்த அலுவலகம் செயல்படும் என்றார். அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், டிசிசிஎல் மாநிலத் தலைவர் சகிலன், சாந்தி செல்வம் (ரோட்டரி கிளப் நெய்தல்), கதிர்வேல் (டிடிஆர்ஓ வட சென்னை), ராமசுப்பிரமணி யன் (ரோட்டரி கிளப்), தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் கவுரவ தலைவர் எஸ்.கே.மகேந்திரன், எல்.சுந்தரராஜன் (சிபிஎம்), எல்.பி.சரவண தமிழன் (வாலிபர் சங்கம்), ஆர்.லோகநாதன் (சிஐடியு), எஸ்.பாக்கியலட்சுமி (மாதர் சங்கம்), மாமன்ற உறுப்பி னர் பா.விமலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் மாநில துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்டச் செய லாளர் எஸ்.ராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொரு ளாளர் ஆர்.நடராஜன் வரவேற்றார். பகுதிச் செய லாளர் தில்ஷாத் பேகம் நன்றி கூறினார்.