districts

img

குறவர் இனப் பெண்கள் பாலியல் வல்லுறவு சித்ரவதை சித்தூர் காவல்துறையினரை கண்டித்து ஜூன் 25 ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி,ஜூன் 20-

    குறவர் இனபெண்களை கொடூர மாக பாலியல் வல்லுறவுக்கும், சித்தரவதைக்கும் உள்ளாக்கியது டன் ஆண்களையும் கடும் சித்திர வதை செய்த ஆந்திரா மாநில காவல் துறையினைரை பணி நீக்கம் செய்யக்கோரி ஜூன் 26 அன்று  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

   கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் அருகே புளியாண்டபட்டி குறவர் இனத்தைச் சேர்ந்த ஐயப்பனை ஜூன் 11ஆம் தேதி இரவு 10 மணிக்கு கைது செய்ய ஆந்திர மாநில சித்தூர் காவல்துறையினர் வந்துள்ளனர்.

    அப்போது ஐயப்ப னின் மனைவி பிரியா, தாய் கங்கம்மா, 7 வயது மகன் ஸ்ரீதர் ஆகி யோரை கைது செய்து  கடத்திச் சென்று பெங்களூரிலுள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கும் முன்பாக 7ஆம் தேதி சுரேஷ் ரேணுகா ஆகியோரை கைது செய்ததன் மூலமாகத்தான் ஐயப்பனை கைது செய்ய வந்துள்ள னர்.  இதுகுறித்து சத்யா புகார் செய்ததால், சித்தூர் காவல்துறை யினர் சத்யாவையும் அவரது கணவர் ரமேஷ், பூமதி ஆகி யோரையும் அடித்து உதைத்து சித்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இருந்தும் தெரி யாது என்று கூறிவிட்டனர்.

     இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் தலையீட்டது. பிறகு, 5 பேரை மட்டும் மீட்டெடுத்தனர். ஐயப்பன், பூமதி எங்கு இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்?  என்று இன்னும் இது நாள் வரை தெரியவில்லை.

     விடுவிக்கப்பட்டவர்களிடம் சித்திரவதை, பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்க வில்லை என்று வற்புறுத்தி எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டு கொடுத்த புகாரை திரும்ப பெற வைத்துள்ளனர்.  

    பாதிக்கப்பட்ட இருளர் இன பெண்கள் தற்போது சிகிச்சை பெற்று வரும் போலப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு,தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.வி.சண்முகம்,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர் இருதய ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் லெனின், முருகன், வழக்கறிஞர்கள் இளவரசன், ரவி, கோபி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் பிரகாஷ், மாதர் சங்க மாவட்டச் பொருளாளர் சரஸ்வதி, போச்சம்பள்ளி வட்ட செய லாளர் ராதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் நாகேஷ்பாபு,விவசாய தொழி லாளர் சங்க வட்டச் செயலாளர் லெனின் உள்ளிட்டோர் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “ஆந்திர காவல்துறையினர் தமிழ்நாட்டிற்கு வந்து ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றால் தமிழ்நாடு காவல்துறையிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், கிருஷ்ணகிரி காவல்துறை எங்களுக்கு தெரியாது என்று கூறு கின்றனர்.

    எனவே, சித்தூர் காவல் துறை யினர் மீது எஸ்சி,எஸ்டி, வன்கொடுமை சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குறவர் இன மக்க ளுக்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றனர்.

     சித்தூர் காவல் துறையின் கொடூர சித்திரவதைகள், பாலியல் வல்லுறவு ஆகியவற்றை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குறவன் இன மக்க ளுக்கு நீதி கேட்டும், தமிழ்நாடு முதல்வர், காவல்துறை தலையிட்டு கிருஷ்ணகிரி காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி வருகிற 26 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.