கடலூர், ஜூன் 4- கடலூர் கம்மியம் பேட்டை சாலை யில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம், ஜவான் பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாகத் தான் சென்று வரு கின்றது. இந்நிலையில் இந்த பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தடுப்பு கட்டைகள் பெயர்ந்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படு வதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரியும் வண்ணம் உள்ளது. இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரியளவில் சேதம் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.