கள்ளக்குறிச்சி, நவ 25- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வரு வாய் அலுவலர் சத்திய நாராயணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க தலை வர்கள் பேசுகையில், மாவட்டத்தில் விவசாயிகள் கரும்புகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது வழித்தடங்களில் மின்கம் பங்கள் மீது மோதாமல் இருப்பதற்கு ஏதுவாக மின் கம்பிகளை உயர்த் திட வேண்டும், விளை நிலங்களில் பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுடு வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்களில் விதை உரம் மற்றும் இதர இடு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கிட வேண்டும், கறவை மாடு கள் வளர்ப்பதற்கு தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சங்கராபுரம் முதல் நெடு மானூர் வரை வயல் வழி சாலை அமைத்து தரவேண் டும், புத்தனந்தல் அணை யில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிடவும். எலவனா சூர்கோட்டை மற்றும் காட்டுசெல்லூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக் கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள தொடர் புடைய துறை அலுவலர் களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார். பாசார் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று தல், ரிஷிவந்தியம் ஊராட்சி யில் பழைய மின் கம்பிகளை மாற்றுதல், எஸ். கொளத் தூர் கிராமத்தில் உலர் களம் மற்றும் பயணியர் நிழற்குடை அமைத்தல், செம்பரம்பட்டு முதல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி வரை பேருந்து வசதி ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட விவசாயி களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுந்தரம்.தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா.மேலாண்மை இயக்குநர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகே சன். நீர்வளத்துறை செயற் பொறியாளர் அருணகிரி.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்த குமார். தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்பார்வைப் பொறியாளர் (பொ) கணே சன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாக ராஜன். கண்காணிப்பு பொறியாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்(பொ) கிருஷ்ணமூர்த்தி. விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயி கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.