சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆறுமுகம் (63) மாரடைப்பால் கடந்த ஜன.12 அன்று உயிரிழந்தார். இதனை அறிந்த சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. மாதவன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.