சென்னை, ஆக.17- மத்திய பாதுகாப்பு அமைச் சகத்தின் சென்னை அலுவல கத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக ஜெயசிங் பொறுப்பேற்றுள்ளார். புதிய பொறுப்புடன் கூடுத லாக சென்னையில் உள்ள டி.டி. தமிழ் அலைவரிசை யின் செய்திப்பிரிவு துணை இயக்குநரகாவும் ஜெயசிங் நீடிப்பார். பாதுகாப்பு அமைச்சகத்தின் சென்னை அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவல ராக இருந்த எம். பொன்னி யின் செல்வன், தில்லியில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகத்தின் இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்று இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அந்தப் பதவியில் ஜெயசிங் நியமிக்கப்பட்டார். ஜெயசிங், 1993-ம் ஆண்டில் இந்திய தகவல் சேவையில் இணைந்து பணியாற்றிய காலத்திலிருந்து நீண்ட அனுபவம் பெற்றுள்ளார். அகில இந்திய வானொலி செய்திப்பிரிவு, தூர்தர்ஷன் செய்திப்பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகம், புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு இயக்ககம் உட்பட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத் தின் பல்வேறு ஊடகப்பிரிவு களில் ஜெயசிங் பணியாற்றி யுள்ளார். தென் கொரியா, துருக்கி, ஜப்பான், தாய்லாந்து, ஈரான், மாலத்தீவுகள், புருனே மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டு பிரதமர்கள் மற்றும் இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ பயணத்தின் போது செய்தி சேகரிக்க ஜெயசிங் சென்றுள்ளது குறிப் பிடத்தக்கது.