districts

img

ஒட்டுண்ணிகள், வைரஸ்களால் ஏற்படும் நோய்கள் குறித்த சர்வதேச மாநாடு

சென்னை, ஜன.21- சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் (சிமெட்ஸ்) ஒட்டுண்ணிகள், வைரஸ்கள், கொசுக்கள் அல்லது பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் குறித்த  4 நாள் சர்வதேச மாநாடு செவ்வாயன்று (ஜன.21) தொடங்கியது. துவக்க விழாவிற்கு பூச்சியியல் பொது சுகாதார மையத்தின் தலைவர் ஆர். எஸ்.யாதவ் தலைமை தாங்கினார். சிமெட்ஸ் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர். என். எம். வீரையன், இணைவேந்தர் டாக்டர் தீபக் நல்லஸ்வாமி,  ஐரோப்பிய கொசு தடுப்பு சங்க துணைத் தலைவர் னார்பர்ட் பேக்கர், அமெரிக்க கொசு தடுப்பு சங்க தலைவர் ரூய் டீ ஷூ, இணைவேந்தர் டாக்டர் அஷுவினி குமார், பதி வாளர் டாக்டர் ஷீஜா வர்கீஸ், சவீதா மருத்துவ கல்லூரி முதல்வர் குமுதா ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினர். பூச்சியல் நிபுணர்கள் அவசியம் பல்வேறு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 16 நிபுணர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டது.  விழாவில் முனைவர் யாதவ் பேசுகையில், மாநகரங்களில், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, மாசு கட்டுப்பாடு, போன்ற பெரும் பிரச்சனைகளை பல்வேறு துறைகள் மேற்பார்வை செய்தாலும், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க பூச்சியில் நிபுணர்கள் மிக அவசியம். அவர்கள் தான் நோய் பரப்பு கொசுக்களை கண்டறிந்து தீர்வு காணமுடியும். வருங்காலங்களில் நோய் பரப்பும் கொசுக்கள் குறித்த விழிப்புணர்வும், பூச்சியியல் நிபுணர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.