கடலூர்,ஜூன் 30-
சாலை விரிவாக்க பணியை முறையாக அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லிக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் முதல் மடப்பட்டு வரை ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட வரை யறுக்கு மாறாக நெல்லிக்குப்பம் பகுதியில் விருப்பு வெறுப்பு அடிப்படையில் ஓர் இடத்தில் கூடுதலாகவும் மற்றொரு இடத்தில் அகலமாகவும் நடைபெறுகிறது.
எனவே திட்ட வரையறைக்கு உட்பட்டு முறையாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற வேண்டும். விரைவாக நடை பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து நெல்லிக்குப்பம் பகுதி குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், பகுதிச் குழு செயலாளர் எம். ஜெய பாண்டியன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.லோகநாதன், பகுதிக் குழு உறுப்பினர்கள் ஸ்டீபன் ராஜ், சுந்தர பாண்டியன், ரேவதி. குமார், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.