districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம்

போதையற்ற தமிழகத்தை உருவாக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக எழும்பூர் பகுதி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்  பள்ளி தலைமை ஆசிரியர்  ரேவதி, புரசைவாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குலாம், ஆசிரியர் மணிகண்டன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். மாணவர்களையும் இவ்வியக்கத்தில் பங்கேற்க செய்து உறுதிமொழி ஏற்றனர்.  சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பார்த்திபன், மாநில குழு உறுப்பினர் நந்தினி, ரோஸி  உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.