விழுப்புரம் மாவட்டத்தில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தமிழ் பாடத்தில் 100 விழுக்காடு தேர்ச்சி அடைய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சி.பழனி சான்று வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் இளமதி, சுமதி உட்பட பலர் உடனிருந்தனர்.