சென்னை, பிப்.23- தீவிர இதய செயலிழப்பு காரணமாக உயிருக்கு போராடிய காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்த 33 வயதான இளம் பெண் ஷாஸாதி ஃபாத்திமாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். பாத்திமாவுக்கு இதய அறைகளின் சுவர் தடிமனாக மாறியதால் இதயம் இறுக்கம் அடைந்து ரெஸ்ட்டி ரிக்டிவ் கார்டியோமயோபதி என்ற பிரச்சனையால் அவதிப்பட்டார். இதன் காரணமாக அவரது இத யம் செயலிக்கும் நிலையை நோக்கி சென்று கொண்டி ருந்தது. நாளுக்கு நாள் அவரது நிலைமை மோச மாகிக் கொண்டிருந்ததால் உயிரைக் காப்பாற்ற மிக விரைவாக இதய மாற்று அறுவைசிகிச்சை செய்வது தான் தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமடை யவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி அவர் சென்னை எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 26ம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் நோயாளி ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக வும் அவரது உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானமாக வழங்க முன் வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டுத் தான மாகப் பெறப்பட்ட இதயம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு மிக விரைவாக கொண்டு வரப்பட்டு ஷாஸாதி ஃபாத்தி மாவுக்கு பொருத்தப்பட்டது. ஆச்சரியப்படத் தக்க வகையில் அவர் உடல் நலம் தேறி, காஷ்மீரில் தன்னு டைய புதிய வாழ்வை தொட ங்கவுள்ளதாக அவ ருக்கு சிகிச்சை அளித்த இதய மாற்று அறுவைசி கிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் கூறினார். திருமணம் ஆகாத ஷாஸாதி ஃபாத்திமா. தன்னுடைய சகோதரருடன் கூலி வேலை செய்து வந்தார். அவரால் இதய நோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய முடியாத நிலை யில் இருந்தார். அந்தப் பெண்ணின் அவல நிலை யைக் கண்டு சென்னையில் உள்ள ஐஷ்வர்யா அறக் கட்டளை அவருக்கு இதய மாற்று சிகிச்சைக்கான ரூ.25 லட்சத்தை அளித்து உதவி யது. இந்த அறக்கட்டளை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.