districts

தாழங்குடாவில் கடல் சீற்றம்

கடலூர், மே 14-

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனையொட்டிய மத்திய வங்கக்கடல்  பகுதிகளில் நிலவிய மோக்கா புயல்  அதி தீவிர புயலாக மாறியது. இதனை யடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர  புயல் எச்சரிக்கை விதமாக 1 ஆம்  எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல்  சீற்றம் காரணமாக மீனவர்கள் பாது காப்பாக இருக்க வேண்டும் என அதி காரிகள் மூலம் எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

   இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட  அதிக அளவில் கடல் சீற்றமாக காணப் பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி  தடைக்காலம் உள்ளதால் பெரும் பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

   ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர்  படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவ தால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க  செல்லவில்லை. மேலும் கடலோர பகுதி களில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.