சென்னை, நவ. 9- இந்திய ரயில்வே எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் சேவைகளின் 1986ஆம் அண்டு பிரிவைச் சேர்ந்த ஸ்ரீ நவீன் குலாட்டி, இணைப்பு பெட்டி தொழிற்சாலையின் (ஐசிஎஃப்) பொது மேலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ஸ்ரீ குலாட்டி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பி.டெக் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் அவர் பணிபுரிந்த போது, இந்திய ரயில்வேயின் தரவுத் தள அமைப்பின் முதுகெலும்பாகக் கருதப்படும் தரவு மையத்தை அங்கு அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார். தகவல் தொழில்நுட்ப ஆர்வலரான இவர், இந்திய ரயில்வேக்கு பல தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்கு வதில் பங்களித்துள்ளார். ரயில் பெட்டிகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. ஐசிஎஃப்.இல் பொறுப்பேற்பதற்கு முன்பு, வடக்கு ரயில்வேயின் கூடுதல் பொதுமேலாளராக இருந்தார். சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் உட்பட ரயில்வேயில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.