சென்னை, நவ. 2 - மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞர் லலிதா வியாழனன்று (நவ.2) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 52. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மனித உரிமை குழுவில் பணியாற்றிய அவர், பல்வேறு மனித உரிமைக் குழுக்களிலும் பணி யாற்றி உள்ளார். மனித உரிமை நிகழ்வு நடைபெறும் இடங்களில் கள ஆய்வு செய்து, உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர். சாலை விபத்தில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேரா.ஈனாக்கின் இணையரான அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்தியசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), மத்தியசென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் பி.கே.மூர்த்தி, பேரா.சீனிவாசன், மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.