பழங்குடி இருளர் இன மக்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி அடிப்படை தேவைகளை செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (மார்ச் 15) சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளா் எம்.அழகேசன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.மோகனன், சிபிஎம் திருப்போரூர் வட்டச் செயலாளர் எம்.செல்வம், திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் எம்.குமார் ஆகியோர் பேசினர். முன்னதாக சங்கத் தலைவர்கள் வட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.