districts

img

திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம்

விழுப்புரம், மே 12-

    திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

   தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க திண்டி வனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் உதவி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் தி. அறிவுடை நம்பி இதனை துவக்கி வைத்தார்.

  இந்த கல்லூரியில் இளநிலை கலைப்பிரிவில் தமிழ், ஆங்கிலம், வணிக நிர்வாகவியல், வரலாறுப் பாடப்பிரிவுகளுக்கும், அறிவியல் பாடப்பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவி யல், புவிஅமைப்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர விரும்பு மாணவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண், மாற்றுச் சான்றுகள், ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.  

  பொதுப் பிரிவினர், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48 பதிவுக் கட்டணமாக ரூ. 2 ஆக மொத்தம் ரூ. 50 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டுமே செலுத்த வேண்டும்.

  இந்த தகவலை கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.