districts

img

உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்

சென்னை, மே 12-

     கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய அரசு முன்வர வேண்டும் என சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் உ.வாசுகி வலியுறுத்தினார்.

   எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாநிலை போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.

   அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி துவக்கி வைத்து பேசுகையில், உலக செவிலியர் தினத்தன்று நாம் போராடி பெற்ற உரிமை களை பாதுகாப்பதற்காக, உழைப்புக் கேற்ற ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். கிராமப் புறங்களில் மகப்பேறு பார்க்கும் எங்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு தாருங்கள். புதிய பணியிடங்களை உரு வாக்குங்கள் என்ற சாதாரண கோரிக்கைகளுக்கே போராட வேண்டியுள்ளது. செவிலியர் பணி என்பது தியாகங்கள், வலி, வேதனை நிறைந்தது. கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆராதிக்கப் பட்டார்கள், போற்றப்பட்டார்கள். ஊரே முடங்கிக் கிடந்த போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாது காத்தனர். உலகமே செவிலியர் களை, மருத்துவர்களை புகழ்ந்தது, அரசு பாராட்டியது.

   ஆனால் அந்த பாராட்டுக்கான பலன் கிடைக்கவில்லை. செவிலி யர்கள் பணி என்பது மக்களு டன் தொடர்புடையது. டாடா வும், பிர்லாவும், அதானியும், அம்பானியும் அரசு மருத்துவ மனைக்கா வருகிறார்கள், அவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைக்கு போகிறவர்கள். ஆனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் தினக் கூலிகள், உழைக்கும் மக்கள். இந்த ஏழை எளிய மக்களை அரவணைத்து பாதுகாக்கும் சேவையை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது சேவை வேறு எந்த சேவைக்கும் இது ஈடாகாது என்றார்.

   குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் கேட்கிறோம். சம வேலைக்கு சம ஊதியம் கேட்கிறோம். கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசு உயர்த்தாமல் இருந்தால், அனைத்து உணவுப் பொருட்களையும் மலிவான விலை யில் ரேசன் கடையில் வழங்கினால் ஊதிய உயர்வு வேண்டும் என்று யாரும் கேட்கப் போவதில்லை. ஆனால் அரசு அனைத்து பொருட்களின் விலையையும் நினைத்த போதெல்லாம் பன்மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கேற்ற ஊதியத்தை வழங்க மட்டும் மறுக்கிறார்கள்.

   எந்த அரசினுடைய கருணை யினாலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்படவில்லை. அனைத்தும் போராடிப் பெற்றவையே. மகப்பேறு விடுப்பு என்பது பெண்கள் அமைப்புகள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகே கிடைத்தது. நிரந்தர தொழி லாளர்கள் குழந்தை பெற்றால்தான் மகப்பேறு விடுப்பு என்பது என்ன நியாயம்?. யார் குழந்தை பெற்றாலும் அவர்களுக்கு விடுப்பு அளிப்பதுதானே நியாயம். நாம் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கு பின்னால் மிகப்பெரிய போராட்ட வரலாறு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.

   சாதி, மதத்தை, தீண்டாமையை முன்நிறுத்தி போராட்டங்களை ஒடுக்க நினைப்பார்கள். ஆனால் போராட்டக் களத்தில் அனை வரும் சமமானவர்கள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு போராட வேண்டும்.

   நீங்கள் உங்கள் கோரிக்கைக ளுக்காக போராடும் அதே நேரத்தில் சமூகத்தில் நிலவும் பாலி யல் வன்கொடுமை, பணியிடங்  களில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறை, அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து போராடவும் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

  சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். முன்ன தாக இணைச்செயலாளர் சுஜாதா வரவேற்றார். மாநிலப் பொரு ளாளர் இ.மைக்கேல் லில்லி புஷ்பம் நன்றி கூறினார். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.