திருவள்ளூர், அக் 4- இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் கைத்தறி நெசவாளர்களுக்கு நிவார ணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி திருவள்ளூர் மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கம் சார்பில் திங்களன்று (அக்2), ஆரணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்க ளுக்கு உடனடியாக தேர் தலை நடத்தவேண்டும், உறுப்பினர்கள் அனை வருக்கும் வாக்குரிமையை வழங்கிட வேண்டும், கைத்தறி ரக ஒதுக்கீடு திட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டும், 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும், ஓய்வூதி யம் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும், தனி நலவாரியம் அமைக்க வேண்டும், வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சந்திரைய்யா தலைமை தாங்கினார்.இதில் மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.செல்வ ராஜ், ஈஸ்வரய்யா, ஜி.சூரிய பிரகாஷ், முனியம்மா, சிஐ டியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.