சென்னை, அக்.2- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பதவியை மறந்துவிட்டு அரசி யல்வாதி போல் செயல்படுகிறார். ஆளுநரின் கதாகாலட்சேபம் தமிழ்நாட் டில் எடுபடாது என்று அமைச்சர் ரகு பதி கூறியுள்ளார். துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை காந்தி மண்டபத்தில், ஆளுநர் ரவி துாய்மை பணியில் ஈடுபட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’காந்தி மண்டப வளாகத்தில், மது பாட்டில்கள் கிடந்தது வருத்தம் அளிக்கிறது,’’ என தெரி வித்தார். இந்நிலையில், அக்டோபர் 2 சென்னை யில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியா ளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது: ஆளுநர் ரவி தனது பதவியை மறந்து விட்டு அரசியல்வாதி போல் செயல்படு கிறார். ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு களை துண்டிக்கும் வகையில் செயல்படுவது டன் ஆளுநர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றுகிறார். தமிழகத்தில் பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு போட்டியாக உள்ள ஒரே இடம் ஆளுநர் மாளிகை தான். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பிஆர்ஓ போலவும் செயல்படு கிறார். ஆளுநரின் கதாகாலட்சே பம் தமிழ்நாட்டில் எடுபடாது அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த ஆளுநருக்கு, கேமராமேன் கண்க ளுக்கும் மதுபாட்டில் தெரிந்துள்ளது. அதிகம் குப்பை சேரக்கூடிய மெரினா கடற்கரை யைக் கூட தூய்மையாக வைத்துள்ளோம். சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநக ராட்சி சிறப்பாக செய்து வருகிறது. மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்து விட முடியாது. இந்தியா முழுவதும் மது விலக்கை கொண்டு வர வேண்டும். எல்லா மாநிலங்களும் மது ஒழிப்பை கொண்டு வந்தால் தமிழகத்திலும் கொண்டு வருவோம். மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு தி.மு.க., அரசு. தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது ஒன்றிய அரசின் கை களில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.