புதுச்சேரி அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை யின் மூலம் 2024- ஆம் ஆண்டுக்கான அரசின் மாத காலண்டரை சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் பெற்றுக்கொண்டார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ெஜயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் நாக தியாக ராஜன், துறைச் செயலர் பத்மா ஜெய்ஸ்வால், இயக்குநர் பத்மாவதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.