சென்னை, ஏப்.17 - எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்பு ணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசிஎல்) சார்பில் சென்னை மணலியில் ஞாயிறன்று (ஏப்.17) சைக்கிள் பேரணி நடை பெற்றது. இதில் இளைஞர்கள் மற்றும் தன்னார் வலர்கள் உட்பட சுமார் 1000 பேர் ஆர்வ முடன் பங்கேற்றனர். இந்நிறுவன உயர் அதி காரிகள் முன்னிலையில், அதன் மேலாண் இயக்குனர் அர்விந்த் குமார் பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் தலைவர் பி. அனிதா, பூப்பந்து வீரர் வேலன், சின்னத் திரை பிரபலங்களான சுஜிதா, காவ்யா, குமரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். சென்னை தவிர மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, ஆக்ரா உள்ளிட்ட 200 நகரங்கிகளில் இத்தகைய பேரணிகள் நடைபெற்றன.