சென்னை, ஜூன் 21
ஆந்திர மாநில உணவுகளுக்கு பெங்களுரில் புகழ்பெற்ற நந்தனா பேலஸ் சென்னையில் 3வது கிளையை திறந்துள்ளது,
சென்னை குரோம்பேட்டையில் சிறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அரங்கத்துடன் இந்த ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாநில அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார். கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூர் நகரில் சுவை மிகுந்த ஆந்திர உணவு வகைகளை வழங்கிவரும் நந்தனா பேலஸ், கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை ஓ.எம். ஆர் சாலையில் தனது முதல் உணவகத்தை திறந்தது.
ஆந்திர மூன்று அத்தியாவசிய உணவு பொருட்களான சிகப்பு மிளகாய், புளி, கோங்குரா மற்றும் ஆந்திரா மாநிலத்தின் மிக பிரபலமான ஆவக்காய், மாங்காய் சட்னி ஆகியவற்றை இந்த உணவகம் சென்னைக்கு கொண்டு வந்துள்ளது என்று உணவகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் கூறினார். திறப்பு விழாவில், அடையார் ஆனந்த் பவன் இயக்குநர்கள் வெங்கடேஷ் ராஜா, ஸ்ரீநிவாச ராஜா, லிட்டில் பிளவர் கல்விக்குழும நிறுவனங்களின் நிறுவனர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.