districts

img

பட்டாசு வெடி விபத்து சிபிஎம் தலைவர்கள் ஆய்வு

கிருஷ்ணகிரி,ஜூலை.31-

     கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்ப வர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகி லேயே, ராஜேஸ்வரி என்ப வர் உணவகம் நடத்தி வரு கிறார். அதே பகுதியில், வெல்டிங் கடை, ஓட்டல் மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன. சனிக் கிழமை (ஜூலை 29)  பட்டாசு குடோனில் வெடித்து சிதறி, அருகே உள்ள சில கடைகள், குடியிருப்பு களும் முற்றிலும் இடிந்து சீரழிந்துள்ளது.

     இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். 12 க்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன்,வட்டச் செயலாளர் டி.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன் ஆகி யோர் வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

     பின்னர் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது, “குடியிருப்பு கள், உணவகம், பள்ளிக் கூடம் என்று மக்கள் நட மாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில் ரவி என்ப வருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. தகுதியற்ற இடத்தில் குடோன் வைப்பதற்கு அனுமதி வழங்கியது தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது” என்றனர்.

    தகுதியற்ற இடத்தில் முறையற்ற அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

     இந்த விபத்தில் உயி ரிழந்தவர்களின் குடும்பத் திற்கு தலா ரூ. 10 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று நபர்களுக்கு உயர்தர சிகிச்சையும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினர்.