districts

பெண் பொறியாளர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

பூந்தமல்லி,ஜன.3-  போரூர் லட்சுமி நகரை சேர்ந்த ஷோபனா (வயது22) கூடுவாஞ்சேரி யில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். செவ்வாயன்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை இருசக்கரவாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டி ருந்தனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது.  இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி     சாலையில் விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லாரியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கி உயி ரிழந்தார். விபத்தில்  எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன்  உயிர் தப்பினார்.  விபத்து நடந்ததும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்கு வரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி னர். மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்ப தாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் பொதுமக்கள்  குற்றம் சாட்டினர்.