சங்கராபுரம், டிச.26- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். நீர் பாசனத்தை தவிர்த்து மானாவாரி பயிர்களான உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். மானாவாரி பயிர் என்பது கிணறு இல்லாமல் மழையை மட்டுமே நம்பி பயிரிடு வது தான் மானாவாரி பயிர் என்பதாகும், இதில் விளையக்கூடிய பயிர்கள் மிகக் குறை வாகும். உளுந்து, பருத்தி இதில் முக்கிய பயி ராக உள்ளது பருத்தி. இது ஆறு மாத கால பெயராகும், ஆடி மாத முடிவில் மழை தொடக்கத்தில் இதை பயிரிடுகின்றனர். டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதை அறு வடை செய்கிறார்கள். இதில் பராமரிப்பு செலவு சுத்தமாக குறைவு, எந்த பராமரிப்பு செலவும் இல்லாமல் லாபம் எடுக்க கூடிய பயிராக பருத்தி உள்ளது. ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 8000 முதல் 15 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் கிணறு பாசனம் இல்லாத மானாவாரி காடுகளில் பருத்தி பயிரிட்டு வருகின்றனர். சங்கராபுரம் பகுதியில் உள்ள சோழம் பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், மஞ்சபுத்தூர், வட செட்டியந்தல், வடசேம பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் பருத்தி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.