தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சமத்துவ இப்தார் விருந்து அரக்கோணத்தில் நகரச் செயலாளர் சாலமோன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ரபிக் அகமத், தலைவர் ஹாஜி சையத் தாஜ் பிரான், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் அப்சல் அகமத், எபி.ம்.சீனிவாசன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), பாஸ்டர் பிரேம்குமார், புத்த பிரகாரம் (பவுத்தர்கள் சங்கம்), மான்மால் ஜெயின் (சங்கம்), குருத்துவாரா நட்சத்தர் சிங், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கவுதம், திருநாவுக்கரசு, கோவி.பார்த்திபன் (சிறுபான்மை மக்கள் நலக்குழு), ஜேம்ஸ் (குளோ அறக்கட்டளை), சமூக சரி சந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். தாஜ் டிராவல்ஸ் பாஷா நன்றி கூறினார்.