சென்னை,டிச.29- சென்னை அண்ணாசாலையில் செல்ல பாண்டியன் என்ற பொறியாளர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று கூறி வழிமறித்தனர். உங்கள் மீது சந்தேகமாக உள்ளது. நீங்கள் வைத்திருப்பதை கொடுங்கள் என்று கூறினர். இதனால் பயந்துபோன செல்லபாண்டியிடம் இருந்து லேப்டாப், மணிபர்ஸ், ஏ.டி.எம்.கார்டு, ரூ.500 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர். இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு காவல்நிலையத்தில் செல்ல பாண்டியன் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.