திருவள்ளூர், பிப்.12- தொழிலாளர்கள் உயிரோடு விளை யாடும் ஆர்.கே.பேட்டை அம்மையப்பர் டெக்ஸ்டைல்ஸ் தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஞாயிறன்று (பிப் 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகில் உள்ள எஸ்.வி.ஜி.புரத்தில் தனியாருக்கு சொந்தமான அம்மையப்பர் டெக்ஸ்டைல்ஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழி லாளர்கள் வேலை செயது வருகின்றனர். இதில் வட மாநில தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். இதில் பாகுபாடு இன்றி அனைவரும் மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் திங்களன்று (பிப் 8), திடீரென நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஆங்காங்கே தலை சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி என பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி மயங்கி விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம் அவரச அவசரமாக நிறுவனத் திற்கு விடுமுறை அறிவித்தது. பின்னர் ஆர்.கே.பேட்டையை சுற்றி யுள்ள அனைத்து அரசு மருத்துவமனை களிலும் தொழிலாளர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் கூட்டம் நிரம்பியதால், திருத்தணியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு அனுமதித்து சிகிச்சை பெற்றனர். இதனைத் தொடர்ந்து பிப் 9 அன்று தொழிற் சங்கத் தலைவர்கள் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஊழி யர்களை நேரில் சென்று நலம் விசாரித்த னர். அப்போது குடிதண்ணீர்தான் பிரச்சினை களுக்கு காரணமாக இருக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளானர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலைக்கு சென்று பார்வையிட்டனர். குடிநீர் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை அமலாக்க வேண்டும், குறைந்த பட்சம் மாதம் ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும்,கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும், தொழிலாளர்களை காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும், மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், விடுமுறைநாட்களில் வேலை செய்ய நிர்ப்பந்திக்க கூடாது,பணி இடங்களில் சுகாதாரத்தை காத்திடும் வகையில். கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், சுத்தமான குடிநீர், அடையாள அட்டை வழங்க வேண்டும், பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.கே.பேட்டை பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஜி.கணேசன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலா ளர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளா ளர் சி.பெருமாள், விசைத்தறி தொழிலாளர் கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிருந்தாவனம், சிபிஎம் வட்டச் செயலாளர் சிவபிரசாத் ஆகியோர் பேசினர்.