செங்கல்பட்டு,மே 6- சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் வளாகத்தில் தேசிய சிறுதானிய மாநாடு சனிக்கிழமை (மே 6) துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஒன்றிய அரசின் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் முனைவர் லோகநாதன் பேசுகையில், புவி வெப்பமயம் மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. முத லாவதாக தட்ப வெப்பம் மாற்றம், இரண்டாவதாக உடல் நல ஆரோக்கிய பிரச்னைகள், மூன்றாவதாக உணவு பற்றாக்குறை. இதற்கான தீர்வினை காணவேண்டியுள்ளது. உடல் நலத்திற்கு ஆரோக்கியமான உணவு முறையான சிறு தானிய உணவு முறை இதற்கு தேவை, தற்போது அரிசி, கோதுமை உணவுகளையே பெரும்பாலும் பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இதற்கு மாறாக சிறுதானிய உணவு முறை அவசியமாகிறது.இந்திய நாடு சிறுதானிய உற்பத்திக்கு ஏற்ற நாடக உள்ளதால் அதனை பயன்படுத்தி சிறுதானியா உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அத்து டன் சிறுதானியா உற்பத்தி பொருட்களை மார்க்கெட்டிங் செய்யவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றவும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார். தஞ்சாவூரில் இயங்கிவரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனை வோர் மற்றும் மேலாண்மை நிறுவனம், எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்த மாநாட்டினை ஒன்றிய உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சக இணைச் செயலாளர் மின்ஹாஜ்ஆலம் தொடங்கி வைத்தார். மாநாட்டில் வேளாண் விஞ்ஞானிகள், தொழில்முனைவோர் , சுய தொழில் குழுவினர், விவசாயிகள் என சுமார் 3,000 பேர் பங்கேற்றுள்ளனர். சிறுதானிய மாநாடு யொட்டி அரசு, தனியார் நிறுவனங்கள்,உணவு பதப்படுத்து தல் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறு வனங்களின் 150 அரங்குகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்ன தாக எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜவஹர்லால் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி,தகவல் தொடர்பு இயக்குநர் ஆர். நந்தகுமார் உயிரி பொறியியல் துறைத்தலைவர் எம்.வைரமணி,எஸ்ஆர்எம் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் முனைவர் அந்தோணி அசோக், வளாக இயக்குநர் திருமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.