districts

img

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வலியுறுத்தல்

வேலூர், ஜன.7 - ஊரக வளர்ச்சித்துறையில் ஊராட்சி செயலாளர் உள்பட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலு வலர்கள் சங்கத்தின் சார்பில் மறியல் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டகணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்எஸ்எம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பணி வரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் வேலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சிதுறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பா.ரவி துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் அசோக்குமார், இணை செயலாளர் மீனா, செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜோஷி, முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.