கள்ளக்குறிச்சி, ஆக.16- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கள்ளக் குறிச்சி மாவட்ட பேரவைக் கூட்டம் திருக்கோவிலூரில் கே. முருகேசன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பென்ஷன் டிரஸ்ட் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண் டும், 2003 க்கு முன் பின் ஓய்வு பெற்ற தொழிலாளர் கள் மற்றும் மஸ்தூர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர் மானியத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண் டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி னர். கிளைத் தலைவர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். பி.விருத்தகிரி வரவேற்றார். மண்டலச் செய லாளர் தங்க . அன்பழகன் துவக்கி வைத்தார்.