districts

img

அரசு கல்லூரிக்கு 3 ஏக்கர் நிலம் தானம் வழங்கிய தொழிலதிபர்கள்

சிதம்பரம், ஜன.22- கடலூர் மாவட்டத்தில் காட்டு மன்னார்கோவில் மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இங்கு விவ சாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டில் கல்லூரி அமைக்க தமிழக அரசு உத்தவிட்டது. இதனையடுத்து, காட்டு மன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்லூரி துவக்கப்பட்டது. கடலூர் மட்டுமின்றி வெளி மாவட்ட மாணவர்களும் இந்த கல்லூரி யில் படித்து வருகிறார்கள். போதிய இடவசதி இல்லாத தால் நெருக்கடியில் நடத்தப்பட்டு வரு கிறது. இதனால், இந்த கல்லூரிக்கு சொந்தமாக நிரந்தர கட்டம் கட்டு வதற்கு அரசு தரப்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. ஆனாலும், இடம் கிடைக்கவில்லை. இதனால், கல்லூரி கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டு வந்தது.  

இதனையறிந்த சிதம்பரசேதுராமன், கேதர்நாதன், சுவேத குமார் குடும்பத்தினர் குமராட்சி அருகே கிழவன்னியூர் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் 3 ஏக்கரை தானமாக வழங்கினர். இந்த இடத்தை மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை யிட்டு ஒப்புதல் வழங்கினர். பின்னர், குமராட்சி பத்திரபதிவு அலுவலகத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, காட்டுமன்னார் கோவில்  வட்டாட்சியர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் அரசு பெயரில் பத்திரப் பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர். இந்நிகழ்வில் குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன், முக்கிய நிர்வாகிகள், சேதுராமன் குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தானமாக வழங்கப்பட்ட நிலத்திற்கு தெற்கில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் 20 செண்டை  சேர்த்து மொத்தம் 4 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில்  அரசு கலைக் கல்லூரிக்கான நிரந்தர கட்டடம் அமைக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.  ஏழை மக்கள் கல்விக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய சேதுராமபிள்ளை குடும்பத்தி னருக்கு சிதம்பரம் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலகர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் நன்றி கூறினர்.  அரசு கல்லூரிக்கு நிலத்தை தானமாக வழங்கிய சேதுராமன் குடும்பத்தினர் சிதம்பரத்தில் உணவகம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்கள்.