மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரக்கோணம் தாலுகா குழு உறுப்பினரும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளின் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினருமான சே.கமலக்கண்ணன் (46) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தா.வெங்கடேசன், எஸ்.சுரேந்திரன், அரக்கோணம் வட்டக்குழு செயலாளர் ஏபிஎம்.சீனிவாசன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.