அரசியலமைப்புச் சட்டத்தையும், தமிழக சட்டமன்ற மரபையும் தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் வடக்கு பகுதிக் குழு சார்பில் எர்ணாவூர் முருகன் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு எஸ்.பாக்கியம், கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, கே.கே.புஷ்பா, சுரேஷ்பாபு, ஆரோக்கியசாமி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.