விழுப்புரம் அருகே உள்ள குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடந்த பாலியல் கொடுமைகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் ஆர் ராதிகா, பொருளாளர் பிரமிளா, செயற்குழு உறுப்பினர் மேரி, துணைச் செயலாளர் எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரி, பொருளாளர் இலக்கிய லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.