உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு செவ்வாயன்று (ஏப்.25) சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஜோஸ்பின் விஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ருத்ரநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.