விழுப்புரம்,நவ.10- மின்வாரிய பகுதி நேர துப்புரவு தொழி லாளர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விழுப்புரம் மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்ட செயலாளர் ஆர்.சேகர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி கலந்து கொண்டு, மின் வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்” என்றார். திட்ட பொருளாளர் வி.கே.ஏழுமலை, துணைத் தலைவர் எம்.புருசோத்தமன், கோட்ட செயலாளர்கள் விழுப்புரம் ஆர்.அருள், செஞ்சி கே.கண்ணியப்பன், திண்டி வனம் முருகானந்தம், கண்டமங்கலம் கே.ஏழுமலை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.