districts

img

சென்னைக்கு குடிநீர் வழங்கும்  ஏரிகளில் நீர் இருப்பு சரிவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும்  ஏரிகளில் நீர் இருப்பு சரிவு

சென்னை, ஏப். 23- கோடைகாலம் தொடங்கிய நிலை யில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளில் நீர் இருப்பு 60 விழுக்காடாக குறைந்துள் ளது. கோடை காலம் தொடங்கிய நிலை யில் சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. மேலும் மக்களின் குடிநீர்  தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏரி, குளம் போன்ற குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் தற்போது 59.71 விழுக்காடு நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. மேலும் 3,231 மில்லியன் கன  அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி யில் 1,153 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 288 கன அடி  நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 200 மில்லியன் கன  அடியில் தற்போது நீர் இருப்பு 187 மில்லியன் கன அடி உள்ளது. இதில் குடிநீர் தேவைக்காக 208 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 3,645 கொள்ளளவு கொண்ட செம்பரம் பாக்கம் ஏரியில் தற்போது 2,455 மில்லி யன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 158 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ள ளவான 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 2,831 மில்லியன் கன அடி இருப்பு  உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 186 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன் கோட்டை ஏரியின் மொத்த கொள்ள ளவான 500 மில்லியன் கன அடியில், தற்போது 396 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஏரிகளின் நீர்  இருப்பு 60 விழுக்காடு வரை குறைந்த  நிலையில் இனிவரும் காலங்களில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.