districts

img

கடலூரிலேயே புதிய பேருந்து நிலையம் குடியிருப்போர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜுன் 28-

      கடலூரிலேயே புதிய பேருந்து நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நல கூட்டமைப்பு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து கடலூர்  அனைத்து குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    இதில் கடலூர் புதிய பேருந்து நிலையம் கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திட வேண்டும், கொண்டங்கி ஏரி, கேப்பர் மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்,  விபத்தில்லா போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்,  கடலூர் வெள்ளி கடற்கரையில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும், கடலூரின் வடிகாலான பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்காலை தூர்வாரி மக்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

     கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன்  தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  பொதுச் செயலாளர் எம். மருத வாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஏ.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.முனுசாமி, டி.மாயவேல், எம். என்.டி.என். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  உதவி பொதுச் செயலாளர் எஸ்.கே.தேவநாதன் வரவேற்புரை யாற்றினார்.

    முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் துவக்கி வைத்து பேசினார்.  காங்கிரஸ் கட்சி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் எஸ். திலகர், விசிக மாவட்ட செயலாளர் ச. முல்லை வேந்தன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தி.ச. திருமார்பன், சிபிஐ மாவட்ட துணை செயலாளர் வி.குளோப், பொது நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொரு ளாளர் பி.சுப்பராயன், மாவட்ட தலைவர் ஜே.ராஜேஷ் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆள வந்தார், மக்கள் அதிகாரம் பாலு உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட செயலாளர் ஆர்.அமர்நாத் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.  உதவி தலைவர் ஆர்.கோபால் நன்றி கூறினார்.