கடலூர், ஜூன் 23-
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் கட்டுள்ள கைதி எண்ணூர் தனசேகரனின் அறையில், சோதனையிட முயன்ற இரண்டாம் நிலை காவலரை அவர் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த காவலர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை யில் சென்னை சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கடந்த ஒரு வருட கால மாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 18 வழக்கு கள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்டில் இவரது அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது. ஆனால் சிறை அலுவலர் மணிகண்ட னுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு எண்ணூர் தனசேகரன், சிறை அலுவலர் மணி கண்டனின் குடும்பத்தினரை உயிரு டன் எரித்து கொலை செய்ய முயற்சி தற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது தொடர்பாக எண்ணூர் தன சேகரனின் தம்பி உட்பட சிலரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். கடந்த வருடம் செப்டம்பரில் மீண்டும் அவரது அறையில் இருந்து மற்றொரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இத னால் அவர் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெளி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பாதுகாப்பும் அதி கரிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தனது அறை யில் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதன் பிறகு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளியன்று (ஜூன் 23) காலை கடலூர் மத்திய சிறை யில் இரண்டாம் நிலை காவலராக பணி புரியும் பிரித்விராஜ் (28), எண்ணூர் தனசேகரன் அறைக்குள் சென்று செல்போன் இருக்கிறதா? என்று சோதனை செய்திருக்கிறார்.
அப்போது அங்கு ஒரு செல்போன் இருந்துள்ளது. அதை பிரித்விராஜ் எடுக்க சென்றபோது கைதி எண்ணூர் தனசேகர் அவரிடம், என்னுடைய அறையிலேயே வந்து சோதனை செய்கிறாயா? என கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவரை கழுத்தில் பலமாக தாக்கினார். இதில் காயமடைந்த காவலர் பிரிதிவிராஜை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவலர்கள் எண்ணூர் தனசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.