இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணகிரியில் வட்டச் செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர், மாநிலக் குழு உறுப்பினர் டில்லி பாபு, செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், சுரேஷ், மகாலிங்கம் ஆகியோர் பேசினர்.