districts

img

சிறுமி கொலை வழக்கில் நீதி விசாரணை வேண்டும்

சென்னை, நவ. 5 - சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப் பட்ட வழக்கில் நீதி விசா ரணை நடத்த கோரி செவ்வா யன்று (நவ.5) அமைந்த கரை காவல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி யது. அமைந்தகரையில் வீட்டு வேலை செய்து வந்த 16 வயது பட்டியலின சிறுமியை வீட்டின் உரிமையாளர், நண்பர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை காவல் துறை முறையாக கையாள வில்லை. எனவே, நீதிவிசா ரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, “போக்சோ, வன்கொடுமை வழக்குகளில் உள்ள பாதிக்க ப்பட்டவர்களின் படத்தை வெளியிடக் கூடாது. ஆனால், குழந்தையின் படத்தை ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசி யல் கட்சிகள் மவுனம் சாதிப்பது வெட்கக்கேடா னது. குழந்தை தொழிலாளர்  முறை ஒழிப்பில் முன்னணி யில் தமிழகம் உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தை வீட்டு வேலை செய்துள்ளது. சென்னையில் அதிக அளவு குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்பதற்கு சான்றாக இந்த மரணம் உள்ளது” என்றார். “சென்னையில் 18  வயதுக்குட்பட்ட குழந்தை கள் தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். அண்ணாநகர் பகுதியில் அண்மையில் ஒரு குழந்தை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டது. அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒரு சிறுமி கொலை நிகழ்ந்துள் ளது. இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் தலை மையிலான குழு, பள்ளி இடைநிற்றலை ஆய்வு செய்து, ஒவ்வொரு மாண வராக சந்தித்து பள்ளியில் சேர்த்து வருவதாக அரசு கூறுகிறது. அப்படியானால், தஞ்சாவூரை சேர்ந்த சிறுமி பள்ளியிலிருந்து நின்ற போது அங்குள்ள ஆட்சி யரும், பள்ளிகல்வித் துறை  அதிகாரிகளும் என்ன செய்தார்கள்? அரசு சொல்வ தற்கு மாறாக, சென்னையில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே, வீடுகளில் தங்கி வேலை செய்வோர் குறித்த விவரங்களை சேகரித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அராஜகங்கள், அத்து மீறலுக்கு சென்னை மாநகர காவல்துறை மவுன சாட்சி யாக இருக்க கூடாது. சிறுமி யின் மரணம் குறித்து நீதித் துறை விசாரணை நடத்த வேண்டும். இடைநிற்றலை தடுக்காத ஆட்சியர், கல்வித் துறை அதிகாரிகளிடம் விசா ரிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். கட்சியின் அண்ணாநகர் பகுதிக்குழு உறுப்பினர் முத்துராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கே. முருகேஷ், வே.தனலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆ.பிரி யதர்ஷினி எம்.சி., கே.மணி கண்டன், எஸ்.பாலசுப்பிர மணியம், பி.சுந்தரம், எம்.ஆர்.மதியழகன், பி.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.