அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பூர் பகுதி குழு சார்பில் எம்.கே.பி. நகரில் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் ஆர்.ஜீவா முனுசாமி, ஆ.முரளிதரன், ஜே.பிரமிளா, எல்.உமா, ஆர்.மோகன், டி.சரவணன், கார்த்திக், நைனா முகமது ஆகியோர் பேசினர்.