வேலூர் டிச. 30 - அரியூர் கூட்டுறவு நூற்பாலை, காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி வலி யுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம், குடியாத்தம் பழைய பேருந்து நிலை யம் ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட் ்டம் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும், பென்லேண்ட் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும், காட்பா டியில் அரசு சிறப்பு மருத்துவமனையை உருவாக்க வேண்டும், கழிஞ்சூர், காட்பாடி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சிஎம்சி மருத்துவமனை, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும், சத்துவாச்சாரி வஉசி நகர் மலைப் பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் உள்ள கெங்கையம்மன் கோயில் தரைப் பாலம், மாதனூர், பச்சகுப்பம் பகுதிகளில் உள்ள பாலங்களை மேம்பாலமாக உயர்த்த வேண்டும், வனவிலங்கு தொல்லை யிலிருந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும், கார்கூர் இருளர் இன மக்களுக்கு சாதிச்சான்று, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுவட்ட சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும், மோர்தானா அணையை சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும், பத்தலப்பள்ளி அணையை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.பி. ராமச்சந்திரன், கே.சாமிநாதன், ஏ.நாரா யணன், எஸ்.டி.சங்கரி, செ.ஏகலைவன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.குண சேகரன், வி.குபேந்திரன், வி.நாகேந்திரன், எஸ்.பரசுராமன், சி.எஸ்.மகாலிங்கம், ஏ.ஆண்டாள், மூத்த தோழர் ஜூடோ ரத்தினம், வேலூர் வடக்கு, தெற்கு, காட்பாடி இடைக்கமிட்டி செயலாளர்கள் கே.பாண்டுரங்கன், எஸ்.செல்வி, ஜி.ஆர்.சுடரொளியன், பி.காத்தவராயன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.