districts

img

குடிமனை பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஆக 22- காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட் பட்ட லால்பேட்டை, அம்பேத்கர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, கொளக்குடி, குமராட்சி ஒன்றியம்,  எடையார், குமராட்சி, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்குட்பட்ட கள்ளிப்பாடி, பூண்டி, அண்ணா நகர், பேரூர், சோழதரம், சாவடி உள்ளிட்ட பகுதி களில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா இல்லை. பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் காட்டுமன்னார்குடி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவல கங்கள் முன்பு  ஆக.22 அன்று குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. காட்டுமன்னார்கோவில் வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கி னார். மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் பொன்னம்ப லம், மணிகண்டன், சாகுல் ஹமீது, விமல கண்ணன், குமராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், பால முருகன், புஷ்பராஜ், ஸ்ரீமுஷ்ணம் வட்டக் குழு உறுப்பினர்கள் பொன்னம்பலம், ஆதிமூலம், தினேஷ்பாபு, கோபி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.